மரம், கல் அல்லது வேறு பொருட்களிலிருந்து பகவானின் ரூபம் செதுக்கப்படும்பொழுது, அதில் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் வீற்றுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். யதார்த்தமாக யோசித்தால் கூட, எல்லா பௌதிக மூலக்கூறுகளும் பகவானுடைய சக்தியின் விரிவுகளே என்பதைப் புரிந்துகொள்ள முடியும். பரம புருஷ பகவானின் சக்தியானது அவரது தனிப்பட்ட உடலிலிருந்து வேறுபட்டதல்ல என்பதால், பகவான் அவரது சக்தியில் எப்பொழுதும் வீற்றுள்ளார். தமது பக்தனின் தீவிரமான விருப்பத்தின் அடிப்படையில் அவர் தம்மை வெளிப்படுத்துகிறார். பகவான் மிக உயர்ந்த சக்திகளைக் கொண்டுள்ளார் என்பதால், அவர் தம்மைத் தமது சக்திகளின் மூலமாக வெளிப்படுத்த இயலும் என்பது நியாயமானதாகும். விக்கிரக வழிபாடு அல்லது சாளக்ராம வழிபாடு என்பது சிலையை வழிபடுவது அன்று. தூய பக்தனின் இல்லத்திலுள்ள பகவானின் விக்ரஹத்தினால், அந்த தெய்வீகமான மூல புருஷர் எவ்வாறு செயல்படுவாரோ அதேபோன்று செயல்பட முடியும்.
(பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதி லீலை 14.9)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆